Friday, November 23, 2012

தர்ம சாஸ்த்ரங்களும், குறளும்



மறைவழி எழுதப்பட்ட அற நூல்கள்
மன்னவன் கோல், அந்தணாளர்தம் அறம்,
வான் மழை இவற்றின் பிணைப்பைப் பலவாறாகக்
கூறுகின்றன.

வள்ளுவமும்  பல குறட்பாக்களால்
அதையே வலியுறுத்துகிறது.

தர்ம சாஸ்த்ர சுலோகங்களுக்கும்,
குறளுக்கும் உள்ள  நெருங்கிய ஒற்றுமையை
இங்கு காண்போம் -


யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதி⁴க³ச்ச²தி |
ததா² கு³ருக³தாம் வித்³யாம் ஶுஶ்ரூஷுரதி⁴க³ச்ச²தி ||  
                                                                                      [2:218]

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு.
                                                                          [396]





அரக்ஷிதா க்³ருʼஹே ருத்³தா⁴: புருஷேராப்தகாரிபி⁴: |
ஆத்மாநமாத்மநா யாஸ்து  ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
                                                                                           [9:12]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
                                                                    [57]


தூய்மை -

அத்³பி⁴ர்கா³த்ராணி ஶுத்⁴யந்தி மந​: ஸத்யேந ஶுத்⁴யதி |
                                                                   [தர்ம சாஸ்த்ரம்]

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
                                            [அறத்துப்பால் :298]



மேலோர் ஒரே குரலில் பேசுவர்