Tuesday, October 30, 2012

பரந்து கெடுக உலகியற்றியான்


இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்

குறளில்  இயற்றுதல் என்பது செய்தல்
எனும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.
உலகியற்றியான் - உலகைப் படைத்தவன்.

இதற்கு வேறு வகையாகப் பொருளுரைப்பது
முற்றிலும் செயற்கையானது.

அகராதி தரும் பொருள் -

இயற்ற - v. n.

1. To do , make, effect, per form, execute, bring about, cause to take place, discharge a duty or obligation, exer cise or use an art, செய்ய.

2. To transact, manage affairs, superintend, cause or excite one to do a thing, நடத்த.

3. To destine, appoint, assign, விதிக்க. (p.)
இயற்றலுமீட்டலுங்காத்தலும். Devising means to increase the finances, collecting and keeping them.
எல்லாத்தவமுமியற்றி. Performing every spe cies of austerity.
ஐந்துவேள்ளியுமியற்றி. Offering the five daily oblations. இறந்தவர்கள்காமுறுமிருங்கடனியற்றி. Duly discharging the debt demanded by departed spirits.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&table=winslow


உலகியற்றுதல் எனும் கருத்தியல் சமண சமயத்தில் உண்டா ?

கிடையாது என்பதே விடை.

உலகு முற்றிலும் சுதந்திரமானது, அதைப் படைப்பவரும், அழிப்பவரும், காப்பவரும் யாரும் கிடையாது என்பதே சமண நம்பிக்கை. இவ்வாறிருக்க உலகியற்றியான் என ஒருவரைத் திருவள்ளுவர், அவர் சமணராக இருக்கும் பக்ஷத்தில் கூற முடியுமா ?

உலகியற்றியவர் என்பதற்கு, உலகுக்குக் கல்வியையும், நற்கலைகளையும்
கற்பித்ததாகச் சமணர்கள் நம்பும் ஆதி தீர்த்தங்கர ஸ்வாமியான
ரிஷப தேவர் எனப் பொருள்கொண்டு பார்த்தால் பொருத்தமாக உள்ளதா ?

ஆதி தீர்த்தங்கரரை இவ்வாறு பழித்துப்பேசச் சமணம் அநுமதிக்கிறதா ?

அனைத்தையும் சேர்த்து ஆலோசிக்கும்போது அவர் ஒரு சமணராக
இருக்க முடியாது என்றே தேருகிறது.


’பரந்து கெடுக உலகியற்றியான்'  இது
ஒரு சங்கப்பாடலை நினைவுறுத்துகிறது :

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
                                                 (புறநானூறு -194)




விளக்கம் :

ஓர் இல் நெய்தல் கறங்க - ஒரு மனையின்கண்ணே சாக்காட்டுப் பறை யொலிப்ப;
ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப - ஒரு மனையின்கண்ணே     மணத்திற்குக் கொட்டும் மிகக்  குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்ப;
புணர்ந்தோர் பூ அணி அணிய - காதலரோடு கூடிய மகளிர் பூவணியை யணிய;
பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - பிரிந்த மகளிரது
வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர் வார்ந்து துளிப்ப;
படைத்தோன் மன்ற - இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக;
அப்பண்பிலாளன் - அப் பண்பில்லாதோனாகிய நான்முகன்;
இன்னாது அம்ம இவ்வுலகம் - கொடிது இவ்வுலகினது இயற்கை;
இதன்  இயல்பு உணர்ந்தோர் இனிய காண்க - ஆதலான் இவ்வுலகினது தன்மை யறிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்து கொள்க


'படைத்தோன் மன்ற அப் பண்பில்லாளன்' எனும்
கருத்தை வள்ளுவர் அப்படியே அடியொற்றியிருக்கிறார்.
திருக்குறள் 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்று படைப்புக் கடவுளையே
குறிப்பதை இப்புறநானூற்றுப் பாடல் உறுதி செய்கிறது.
இக்குறளின் கருத்தைச் சங்கத்தின் நீட்சியாகக்
கருதுவது இலக்கியச் சுவையை மிகுவிப்பதோடு,
வள்ளுவர் ஒரு சமணர் எனும் கருத்தியலுக்கும் முடிவு கட்டுகிறது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே
அந்த நான்முகனே' என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர்
நான்முகனை நொந்துகொள்வதும் நமக்கு நினைவுக்கு வருகிறதல்லவா ?


உலக நடையைக் கற்பித்த, பெரு  மதிப்புக்குரிய
ஆதி தீர்த்தங்கரரைப் பழிப்பதுபோல் பா அமைவது
ரசபங்கமாகும்; வள்ளுவர் சமண முனிவராயிருப்பின்
'கெடுக' எனும் நிந்தனையை நினைத்தும் பார்த்திருக்க
மாட்டார்.


பாகவதம் போற்றும் ரிஷப தேவர் மீதுள்ள பெருமதிப்பின்
காரணமாக இதைச் சொல்ல நேர்கிறது.


பிரபஞ்சத்துக்குப் படைப்போன் கிடையாது  என்று தெளிவாகச் சொல்கிறது
கீழ்க்கண்ட பதிவு -


God in Jainism

Jainism rejects the idea of a creator deity that could be responsible for the manifestation, creation, or maintenance of this universe. According to Jain doctrine, the universe and its constituents (soul, matter, space, time, and principles of motion) have always existed. All the constituents and actions are governed by universal natural laws and an immaterial entity like God cannot create a material entity like the universe.


http://en.wikipedia.org/wiki/God_in_Jainism

Friday, October 26, 2012

திருமந்திரமும் , குறளும்


திருமந்திரம் 1 கடவுள், 2. மழை, 3. நீத்தார், 4. அறம் 5. வேந்தர்
என்ற ஐவகை வாழ்த்துக்களை உடையது. வள்ளுவமும் பாயிரப்
பகுதியில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்
வலியுறுத்தல் என அமைந்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது.
அரச வாழ்த்தைப் பொருட்பாலில் காணலாம்.

இதனால்தான்,  ஔவையார் தேவர் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் (நல்வழி 40) என்றனர். அஃதாவது, இருநூல்களும்
ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் அறிவிக்க வந்தன என்பதாம்.

மண்ணைத் தோண்டுதல், சுரங்கப் பணி இவை சமண சமயத்தில்
விலக்கப்பட்ட அபாதாந கர்மங்கள் [உயிர்களுக்குத் துன்பம் தரும்
எனும் நோக்கில்]. நீர்நிலைகளின்றி உழுதொழில் கிடையாது.
திருவள்ளுவர் உழுதொழிலை மிகவும் சிறப்பித்துள்ளார்.

சாவகப் பிரிவினருக்கான குணவ்ரதம், சிக்ஷாவ்ரதம் இவற்றைப்
பகுத்துச் சொல்லும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’  7ம் அத்யாயம், 16ம்
ஸூத்ரத்தின் விளக்க உரையின் [உபாத்யாய கேவல முநி]
ஆதாரத்தில் இது கூறப்படுகிறது.


‘தத்வார்த்த ஸூத்ரம்’ சமண சமயத்தின் பல்வேறு பிரிவினரும்
ஒருமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள சான்று நூல் என்பது குறிப்பிடத்
தக்கது.

Monday, October 15, 2012

மிக அரிய நூல்கள், தமிழில் செம்பதிப்புகளாக...


    ஸ்ரீ மஹாபாரதம் :

    மஹாபாரதத்தை மூலத்தில் உள்ளபடியே லட்சக்கணக்கான பாக்கள், 18 பர்வங்களை உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டு வந்த ஒரு மாபெரும் சாதனையாளர், திரு ம வீ  ராமாநுஜாசாரியார். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்து ஏறக்குறைய  25 ஆண்டுகால உழைப்பில்  தமிழாக்கம் செய்து, அரும்பொருள் செலவு செய்து, பதிப்பித்து வெளிக்கொணர்ந்தது ஒரு பெரும்சாதனை. அப்பதிப்புகளை மீண்டும் தற்போது நமக்கு அளிப்பவர் திரு. வேங்கட ரமணன் அவர்கள், 18 பர்வங்கள் 9 பகுதிகளாக , மொத்தம் 9,000 பக்கங்கள்.


    ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் :

    தமிழாக்கம் : பண்டித ஸ்ரீ நடேச சாஸ்த்ரிகள்
    2,250 பக்கம் ரூ 900/-
    ஸுந்தர காண்டம் மட்டும் ரூ 90/-


    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் :
    ஆதி சங்கரர், ஸ்ரீ பட்டர் உரைகள்

    தமிழாக்கம் : ம. வீ . ராமாநுஜாசார்யர்
    விலை : ரூ 180/-


    கிடைக்குமிடம் :

    Sri S Venkataramanan
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram : 600059

    cell +91 9894661259





Very rare translations of Mahabharata, Sri Ramayana and Sri Vishnu Sahasranama all in lucid Tamil