Friday, October 26, 2012

திருமந்திரமும் , குறளும்


திருமந்திரம் 1 கடவுள், 2. மழை, 3. நீத்தார், 4. அறம் 5. வேந்தர்
என்ற ஐவகை வாழ்த்துக்களை உடையது. வள்ளுவமும் பாயிரப்
பகுதியில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்
வலியுறுத்தல் என அமைந்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது.
அரச வாழ்த்தைப் பொருட்பாலில் காணலாம்.

இதனால்தான்,  ஔவையார் தேவர் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் (நல்வழி 40) என்றனர். அஃதாவது, இருநூல்களும்
ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் அறிவிக்க வந்தன என்பதாம்.

மண்ணைத் தோண்டுதல், சுரங்கப் பணி இவை சமண சமயத்தில்
விலக்கப்பட்ட அபாதாந கர்மங்கள் [உயிர்களுக்குத் துன்பம் தரும்
எனும் நோக்கில்]. நீர்நிலைகளின்றி உழுதொழில் கிடையாது.
திருவள்ளுவர் உழுதொழிலை மிகவும் சிறப்பித்துள்ளார்.

சாவகப் பிரிவினருக்கான குணவ்ரதம், சிக்ஷாவ்ரதம் இவற்றைப்
பகுத்துச் சொல்லும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’  7ம் அத்யாயம், 16ம்
ஸூத்ரத்தின் விளக்க உரையின் [உபாத்யாய கேவல முநி]
ஆதாரத்தில் இது கூறப்படுகிறது.


‘தத்வார்த்த ஸூத்ரம்’ சமண சமயத்தின் பல்வேறு பிரிவினரும்
ஒருமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள சான்று நூல் என்பது குறிப்பிடத்
தக்கது.

No comments: