Tuesday, June 10, 2008

இரண்டாய்ப் பிரிவது தான் இயற்கையா..


மரம், செடி, கொடிகள் கவடு விட்டுப் பிரிந்து வளர்கின்றன.குடும்பங்களும் பிரிகின்றன; கட்சிகளும் பிரிகின்றன;தேசங்களும் பிரிகின்றன.

ரஷ்யா பல துண்டுகளாகச் சிதறியது.நேரு பாரதத்தை மொழிவாரியாகப் பிரித்தார். மொழி ஒன்றாக இருந்தாலும் வேறு பல காரணங்களுக்காக வட மாநிலங்களில் பிரிவு ஏற்பட்டது. வங்கமும், ஆந்திரமும் என்று பிரியுமோ? தமிழகத்திலும் பிரிவு வரலாம் என்று காதில் விழுகிறது.

ஆன்ம நேயம் பேசும் மத மரபுகளைப் பார்த்தால் அவற்றினுள்ளும் பல பிரிவுகள்.வேத நெறியிலும் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள்.

வழிபாட்டு நெறியிலோ சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவுகள்.

சைவத்தினுள்ளும் சித்தாந்த சைவம், வைதிக சைவம், காச்மீர சைவம் என்ற பிரிவுகள்.

வைணவம் மர்க்கட கிசோரம், மார்ஜால கிசோரம் என்னும் பிரிவுகளோடு திகழ்கிறது.

பவுத்தத்தில் ஹீனயானம், மஹாயானம் .பிரம்ம ஸூத்ரத்தில் வ்யாஸ முனிவர் பவுத்தர்களில் யோகாசாரன்,மாத்யமிகன் போன்ற தத்துவவாதிகள் பலர் இருந்ததைத் தெரிவிக்கிறார்.

சமணர்களிலோ சுவேதம்பரர், திகம்பரர் என்று இரு பிரிவு. சுவேதம்பரர் வெள்ளை ஆடை உடுப்பர்; திகம்பரர் ஆடையின்றி இருப்பர்.

ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற யூத மதத்திலும் அஷ்கென்ஸி, ஸெபார்டி என்னும் இரு பிரிவுகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலும் கதோலிக்க, ப்ரோடஸ்டன்ட் பிரிவுகள்.

அதற்குப் பின் தோன்றிய மொகம்மதிய மதத்திலும் ஷியா, சன்னி, ஸூஃபி, வஹாபி என்ற பிரிவுகள்.

வெகு அண்மையில் தோன்றிய சீக்கிய மதத்தில் ”தேரோ பந்த்” என்னும் கிளை தோன்றி விட்டது.

எது எப்படியாயினும் பிரிவு என்பது தளர்ச்சிக்குக் காரணமாகாமல் வளர்ச்சியைத் தந்தால் சரி தான்!!

Monday, June 9, 2008

திருமங்கை ஆழ்வார் -

இவர் பல்லாயிரம் பாகவதர்களுக்கு அமுது செய்வித்து அருளினார்..

பகவானிடமிருந்தே வாள் வலி கொண்டு மந்திர உபதேசம் பெற்றார்.

பகவானுக்குச் சொற்கோவிலோடு கற்கோவில்களையும் சமைத்தார்.

வடநாட்டுத்திருப்பதிகள் அனைத்தையும் மங்களாசாஸனம் செய்துஅருளினார்.

'கற்கலாம் கவியின் பொருள் தானே' என்று கண்ணனையே தமிழ் கற்றுக்கொள்ள அழைத்தார்.

எம்பெருமானுக்காக மடலூர்ந்தார்.

இறுதியில் திருப்பணி செய்தவாறே உயிர் துறந்தார்.

பகவத், பாகவத கைங்கர்யங்களின் எல்லை நிலம் இவரே எனத்தட்டில்லை.









ஒரு நல்ல செய்தி

பல மொழிகளைக் கற்போருக்கு மூளை வெகு எளிதில் முதுமை அடைவதில்லையாம்!! நண்பர் திவா அவர்கள் 'நல்ல செய்தி' blog-ல் பதிவு செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்களாம்.

Wednesday, June 4, 2008

ஜ, ஸ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை அப்புறப்படுத்துவதற்குப்பல தலைகள் அரும்பாடுபட்டு வருகின்றன.'கஷ்டம்' என்பதில் கிரந்தம் நுழைந்துவிட்டது;
அதை ஒழித்துவிட்டு 'கடினம்' எனும் சொல்லைப் பயன்படுத்தப் போகிறேன் - என்று சூளுரைக்கிறது ஒரு தலை.
'கஷ்டம்' , கடினம்' , 'சிரமம்' எல்லாமே வட சொற்கள் தாமே!!
இந்த கிரந்த எழுத்துகள் ஸ்டாலின், ஜேம்ஸ்,ஸ்டெல்லா, இப்ராஹிம், அன்வர் பாஷா போன்ற மேற்கத்திய மொழிச் சொற்களைக் கையாள்வதற்கும் பயனாகின்றனவேபெருந்தலைகளே!!
பைபிளிலும், கொரானிலும் இடம்பெறும் கிரந்த எழுத்துக்களின்மாற்றுருவாக்கப்பணியும் தொடரும் என நம்பலாமா?

Tuesday, June 3, 2008

மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது ?அறிவா ? ஆற்றலா? - இரண்டும் அல்ல.சர்கஸில் விலங்குகளும் பறவைகளும் மனிதன் செய்வதை எல்லாம் வெகு நேர்த்தியாகவே செய்கின்றனவே !!வலிமையோ , ஆற்றலோ கேட்கவே வேண்டாம் .அவ்ற்றுக்குத்தான் முதலிடம்.பின் மனிதனின் தனித்தன்மை தான் என்ன ?பகுத்தறிவு - விவேகம் : அது ஒன்றில் தான் அவன் மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டும்.(ஸ்வாமி ராம் ஸுக தாஸ் அவர்கள் - கீதைக்கான ஸாதக ஸஞ்ஜீவனி விரிவுரைலிருந்து)

Monday, June 2, 2008

an opinion

அன்பர்களே!

வடமொழியைத் தமிழின் துணை மொழியாகக் கருத முயலுங்கள்.
அது ஒரு பகை மொழியன்று. போட்டி மனப்பான்மை தன்னலம் காரணமாக
எழுகிறது.வடபுலம் சார்ந்த சிந்தனை , அது சமயங்களின் சார்புடையது ஆயினும் தமிழ் மொழி வளம் பெற்றது உண்மையே.

ராம. தேவராஜன்

.