Friday, September 13, 2013

பகவந்நாமம்



ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்க பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (இந்த நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்).

கடவுளின் நாம இயக்கத்தின் மகிமை என்னவென்றால் எவ்வளவோ,
ஆனால் கண்ணுக்குத் தெரிந்து சொல்ல வேண்டும் என்றால், ஜாதியினால்
ஏற்படும் பிரிவினைப் பார்வையை அடித்துக் கீழே வீழ்த்துகிறது.
பக்தி என்னும் உள்ளத்தின் எழுச்சியில் மனிதர்களின் அஹங்காரம்
தீனியாகக் கேட்கும் பல திமிர்த்தனங்களை எரித்த கயிறாக ஆக்குகிறது.
கடவுளின் நாமத்தில் ஈடுபட்ட உள்ளத்தரான பக்தர்களிடத்தில் உயர்வு தாழ்வு
பார்ப்பவன் அருநரகு அடைவான் என்ற நிர்தாட்சண்யமான செய்தியை
அஞ்சாமல் அமுல்படுத்திப் பார்த்த இயக்கம் எது என்று பார்த்தால் இந்த
இறைவனின் திருநாமத்தில் உள்ளம் உருகும் ஈடுபாடு என்ற நாம ஜபம்,
கீர்த்தனம் என்ற இயக்கம்தான். ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம்
நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது.

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர்.

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல்
பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும்.”

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில் பட்ட உப்புப்போல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்தநாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். ”

" ஹரி” என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான்.

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!'

"'கமல நயன! வாஸுதேவ! விஷ்ணோ! தரணீதர! அச்சுத! சங்கசக்ரபாணே!
நீரே சரணம் என்று சொல்பவர்களை விட்டுவிடு, கிட்டே அணுகாதே” என்று
யமன் தன் தூதனுக்குச் சொன்னான்.

"இதுமுதலான வசனங்களால் ச்ரத்தையும், பக்தியும் இல்லாதபோனாலும்
நாமசங்கீர்த்தனம் ஸகலபாபங்களையும் நாசம் செய்துவிடும்” என்று சொல்லப்பட்டது.

"மனத்தால் நினைத்தே வாயால் பேசுகிறான், எதை  மனத்தால் நினைப்பானோ
அதையே வாயால் பேசுகிறான்” என்ற இரண்டு வாக்கியங்களாலும் ஸ்மரணமும், தியானமும் நாமகீர்த்தனத்துள் அடங்கியது.


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_7.html

Sunday, August 25, 2013

Vivekananda - His Call To The Nation


பாரதம் உலகுக்களித்த செய்தியை வளரும் சமுதாயம் உணர்வதற்கும், மனித வாழ்க்கையின் மகத்துவம் ஆத்ம ஞானம் அடைவதில் இருக்கிறது என்பதை உணர்வதற்கும், மேற்கு உலகம் தரும் நன்மைகளையும், கிழக்கு உலகம் தரும் நன்மைகளையும் மனிதர் தன்னம்பிக்கையுடனும், கம்பீரத்துடனும் தம் வாழ்வில் ஒருங்கிணைத்து மலரச் செய்வது எப்படி என்பதை இளைய சமுதாயம் கற்று ஊக்கம் கொள்வதற்கும் சுவாமி விவேகாநந்தரின் கருத்துகள் மகத்தான உதவியாகும். அவருடைய கருத்துகள் அடங்கிய சிறுநூல் ஒன்று நெடுநாளாக அச்சில் இருந்துகொண்டிருப்பது, இப்பொழுது மிக மிகக் குறைந்த விலையில் அத்வைத ஆசிரமம் வெளியிட்டுள்ளது.

நூல் : Vivekananda - His Call To The Nation 

விலை ரூ 4 மட்டுமே. 

இந்த நூல் அவரது கருத்துகளை பல்வேறு தலைப்புகளில் தொகுத்தது.
பாக்கட் சைஸில் 112 பக்கங்கள். ஆனால் அருமையான தொகுப்பு.

இதை அதிகமான அன்பர்கள் நூற்றுக் கணக்கில் வாங்கி இளைஞர்களுக்கு
அன்பளிப்பாகத் தருவது சிறந்த பணியாக அமையும்.

இன்னும் குறைந்த விலையில் தர வேண்டியோ அல்லது இன்னும் அதிகப் பிரதிகள் இந்த விலையிலேயே தொடர்ந்து அச்சடிக்க வேண்டியோ அல்லது இந்த மாதிரி விலையில் இன்னும் அவருடைய வேறு ஏதாவது நூல்களைக் குறைந்த விலையில் தர இயலுமாறோ யாரேனும் நன்கொடை தந்தும் வருங்காலத்திற்கு நன்மை பயக்கலாம்.

முக்கியமாக அவருடைய Lectures from Colombo to Almora, ஆங்கில நூல்,
கொலம்புவிலிருந்து அல்மோராவரை, தமிழ் நூல் இரண்டையும் ரூ 5 வீதம் விற்பனைக்குக் கொண்டுவர பணநலம் மிக்க அன்பர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு பண்ணினால் இளைய பாரதம் என்றும் வாழ்த்தும்.

இந்த நூல் 100 ரூபாய்க்கு 25 பிரதிகள் என்று குறைந்த பட்சம் எல்லோரும் வாங்கிக் குழந்தைகளுக்கு அளித்தால் எத்தனையோ நன்மை உண்டு.

நிச்சயம் நற்பணிக்கு நீங்கள் முந்துவீர்கள்.

வாழ்க பாரதம்!

http://ramakrishnamission.org/publication.htm

[கருத்து : ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள்]

Monday, June 3, 2013

”மன்னார்” திருக்கோவில்கள்


கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்”
என்றழைக்கப் படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.

“ஸ்ரீ வில்லிபுத்தூர்” –

பெரியாழ்வாரும், நாச்சியாரும் அவதரித்த திருத்தலம்.
ஆண்டாள் ஆலயத்தில் மூலவர் ‘ரங்க மன்னார்’. ரங்க மன்னாரின் இரு மருங்கிலும் நாச்சியாரும், கருட பகவானும் காட்சி தருகின்றனர்.


http://www.srirajagopalaswamy.blogspot.in/

Monday, April 22, 2013

கம்ப ராமாயண வகுப்பு

கம்ப ராமாயண வகுப்பு :


1.  https://www.youtube.com/watch?v=VAsL_y6xCqQ

2.  https://www.youtube.com/watch?v=qPexxso0wko

3.  https://www.youtube.com/watch?v=zvPRwVJGG0g

4.  https://www.youtube.com/watch?v=KuCorRPTq9w

5.  https://www.youtube.com/watch?v=8MpfLP7NJqY

6.  https://www.youtube.com/watch?v=8MpfLP7NJqY

Saturday, February 9, 2013

விஸ்வரூபம்




இஸ்லாமிய அமைப்புகள் இத்திரைப்படம் குறித்து எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாமல், சாதாரணமாக இப்படம் வெளியாகியுருக்குமேயானால், ஹே ராமை விட மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும், இப்படத்தை கிழித்து தொங்க விட்டிருப்பார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் செய்த பிரச்சினையால் இப்படம் சகலகலா வல்லவன் போன்ற வெற்றியை அடைந்திருக்கிறது. தியேட்டருக்கு திருவிழாவுக்குச் செல்வது போலச் செல்கிறார்கள். குறிப்பாக
இஸ்லாமியர்கள்  அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில் என்று கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள்.


படத்தின் நடுவே பல்வேறு தீவிரவாதிகள் லூசான கருப்பு சுடிதார் போன்ற கருப்பு உடைகள் அணிந்து கமலிடம் பயிற்சி எடுக்கிறார்கள். இந்தப் பயிற்சிகளைப் பார்த்து, இந்திய ராணுவம், கமலுக்கு சிறப்பு கர்னல் பதவி கொடுத்தே ஆக வேண்டும். பல்வேறு தீவிரவாதிகளை சர்வசாதாரணமாக
ஒரே ஆளாக உருவாக்குகிறார் கமல். கருப்பு சுடிதார் அணிந்த காமெடியன்கள் என்று பார்வையாளர்களுக்குத் தோன்றி விடுமோ என்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் படத்தை வைத்து அதை சுடுகிறார்கள்.
அந்தக் காட்சி வந்ததும், பார்வையாளர்களுக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.


http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1760:2013-02-08-17-21-17&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19